இராவுத்தர் ,லெப்பை இவை இரண்டும் தமிழை தாய்மொழியாக கொண்ட இரு இஸ்லாமிய பிரிவுகள்.பொருளதாரத்தை மையப்படுத்தி இராவுத்தர் உசத்தி, லெப்பை கீழ் என்று பிரிக்கப்பட்டவர்கள்.
உருவ வழிப்பாட்டுக்குத் தடை , வீட்டில் பிராணிகள் வளர்க்கத் தடை போன்ற கோட்பாடுகள் உள்ள சமூகத்தில் , முற்போக்கு சிந்தனை கொண்ட , இராவுத்தர்மார் ஒடுக்கத்தை எதிர்க்கும் எண்ணம் கொண்ட லெப்பை சமூகத்தில் பிறந்த கருத்த லெப்பையின் வாழ்வும் மரணமும் பற்றிய கதை .
தன் பாட்டி ராதிம்மாவிடம் நாயகத்தின் அபுபக்கர்,சின்னப்பேச்சி,ராதிம்மா மேலும் பலர் .
கதையின் போக்கினை கதாசிரியர் நன்றாக கையாண்டு, வாசகரை மேலும் படிக்க ஆர்வத்தை ஏற்படுத்துகின்றார் .
கதாசிரியர் லெப்பை இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறையை அழகாகவும் , இராவுத்தர்-லெப்பை வேறுபாடுகளை உறுத்தாத முறையிலும் பதிவு செய்துள்ளார்.
கருத்த லெப்பை - கீரனூர் ஜாகிர் ராஜா, மருதா பதிப்பகம், ரூ 40.