கருத்த லெப்பை - கீரனூர் ஜாகிர் ராஜா


இராவுத்தர் ,லெப்பை இவை இரண்டும் தமிழை தாய்மொழியாக கொண்ட இரு இஸ்லாமிய பிரிவுகள்.பொருளதாரத்தை மையப்படுத்தி இராவுத்தர் உசத்தி, லெப்பை கீழ் என்று பிரிக்கப்பட்டவர்கள்.


உருவ வழிப்பாட்டுக்குத் தடை , வீட்டில் பிராணிகள் வளர்க்கத் தடை போன்ற கோட்பாடுகள் உள்ள சமூகத்தில் , முற்போக்கு சிந்தனை கொண்ட , இராவுத்தர்மார் ஒடுக்கத்தை எதிர்க்கும் எண்ணம் கொண்ட லெப்பை சமூகத்தில் பிறந்த கருத்த லெப்பையின் வாழ்வும் மரணமும் பற்றிய கதை .

தன் பாட்டி ராதிம்மாவிடம் நாயகத்தின் உருவத்தை கேட்டு மனனம் செய்து அடுத்தநாள் அதை படமாக வரைகின்றான் கருத்த லெப்பை . குழந்தைகளுக்கு விதவிதமாய் கைக்கடிகாரமும் மோதிரமுமாக மிட்டாய் செய்து தரும் அமீது மூலமாக தான் வரைந்த நாயகதின் படத்தை களிமண் உருவமாக செய்யப் பெறுகிறான். தனால் கல்லெறி பட்டு உயிரை விடுகிறான்.

கதைக்கு மாந்தர்கள் சுமையாக இல்லாமல் , நமக்கு அவர்கள் நன்கு அறிமுகமாகும் முன்னரே அவர்களுக்கு திரை மூடப்படுகிறது. உதாரணத்துக்கு
அபுபக்கர்,சின்னப்பேச்சி,ராதிம்மா மேலும் பலர் .

கதையின் போக்கினை கதாசிரியர் நன்றாக கையாண்டு, வாசகரை மேலும் படிக்க ஆர்வத்தை ஏற்படுத்துகின்றார் .

கதாசிரியர் லெப்பை இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறையை அழகாகவும் , இராவுத்தர்-லெப்பை வேறுபாடுகளை உறுத்தாத முறையிலும் பதிவு செய்துள்ளார்.


கருத்த லெப்பை - கீரனூர் ஜாகிர் ராஜா, மருதா பதிப்பகம், ரூ 40.