வாடிவாசல் - சி.சு.செல்லப்பா


அமரர் சி.சு.செல்லப்பாவின் அறிமுகத்தை எஸ். ரா வின் வாசக பர்வம் கட்டுரையில் அறிந்தேன். தமிழ் இலக்கியத்தைச் சமகால உலக இலக்கியத்திற்குச் சமமானதாக உருமாற்ற வேண்டும் என்ற வேட்கை அவருக்குள் தீவிரமாக இருந்ததாகவும், எழுத்து மற்றும் மணிக்கொடி இதழ்களை நடத்த செல்லப்பா பட்ட இன்னல்களையும் பதிவு செய்திருந்தார்.அவர் படைப்பில் ஒன்றான வாடிவாசல் தமிழ் இலக்கியத்தில் மகுடம் சூட்டப்பட்ட குறு நாவல்களில் ஒன்று.ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல்.

ஜல்லிகட்டை விருமாண்டி, வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் பார்த்த எனக்கு வாடிவாசல் வாசிப்பின் முடிவில் நேரில் கலந்து கொண்ட அனுபவத்தை ஏற்படுத்தியது.ஏறுத்தழுவல் நாளன்று அருகாமையில் உள்ள ஊர்களில் இருந்து வரும் பார்வையாளர்கள் முதல், ஜமீன்தாரின் காரிக் காளையை அடக்கப்பட்டது வரை நடக்கும் நொடிப்பொழுது சம்பவங்களை கதையாக்கப்பட்டுள்ளது.

பிச்சியும்,மருதனும் மாபிள்ளை மச்சினன்.பிச்சியின் தந்தையை முந்தைய ஜல்லிக்கட்டில் கொன்ற ஜமீன்தாரின் காரிக்காளையை அடக்க வாடிவாசலை களமாக தேர்ந்து எடுக்கிறான் .வாடிவாசல் கூட்டத்தில் கிழவன் கொடுக்கும் நுட்பமான தகவல்களை கொண்டு பிறர் அடக்க அச்சப்படும் பிள்ளைக்,கொராலு காளைகளை அடக்கி கூட்டத்தின் மரியாதையைகளையும்,மதிப்புகளையு
ம் பெறுகிறான் பிச்சி.காரிக்காளையை அடக்கவே வந்துள்ளான் என்று அஞ்சும் ஜமீன்தார் அவர் எண்ணத்தை போலவே காரிக்காளையை அடக்கி தன் சபதத்தை நிறைவேற்றுகிறான்.

எந்த விதத்திலும் யாரையும் புண்படுத்தாமல் மிகுந்த கவனத்துடனும் ,அதே போல தன் பழிவாங்கும் செயலில் வீரத்துடனும்,விவேகத்துடனும் பிச்சியின் கதாபாத்திரத்தை மனதில் பதியுமாறு கதயமைத்துள்ளார்.மேலும் வாடிவாசல் ஒரு நாவலாக மட்டுமில்லாமல் ஜல்லிக்கட்டை பற்றிய நுட்பமான தகவல் கொண்ட களஞ்சியமாக படைத்துள்ளார் சி.சு.செல்லப்பா.

இக்குறுநாவலை எழுத்து பத்திரிக்கையின் சந்தாதாரர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பினார் என்ற செய்தியும் உண்டு.

வாடிவாசல் - சி.சு.செல்லப்பா, காலச்சுவடு
பதிப்பகம், ரூ 40

The Way Home - அன்பின் அழகு


உலகில் உன்னதமான உறவுகளில் ஒன்று பாட்டி - பேரன் உறவு. தாய் சேய் உறவு தான் முதன்மை என்றாலும் , பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த அனைவருக்கும் ஒரு படி மேல் பாட்டியின் அன்பு.கட்டுபாடுஅற்ற , அளவில்லா பாசம் மற்றும் குறைவில்லா சுதந்திர வாழ்கை பாட்டியின் அரவணைப்பில் கட்டாயம் கிடைக்கும். அப்படி வளைந்த எனக்கு " தி வே ஹோம் " என்ற படம் பெரும் தாக்கத்தை எற்படுதியது.

சீயோல் நகரில் பிறந்து வளர்ந்த "சங்க் வூ" தன் தாய் வழி பாட்டியிடம் சிறிது காலம் வசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது . "சங்க் வூ " வின் அம்மாவுக்கு புது பணி தேட வேண்டிய அவசியத்தால் , தன் அம்மாவிடம் சிறிது காலம் விட்டு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகின்றது.

எழுபத்தி எட்டு வயதான, ஊமை பாட்டியின் குடிசையில் போதிய மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி கிடையாது . மேலும் பாட்டியிடம் இல்லை என்பதே அதிகம் . தான் சீயோலீல் இருந்து கொண்டு வந்த தின்பண்டங்களும் விளையாட்டு பொருள்களையும் கொண்டு தன் பொழுதை கழிக்கும் சங்க் வூ , தன் பாட்டி காட்டும் அன்பை பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்துகிறான்.

காலபோக்கில் தான் கொண்டு வந்த நிகழ்பட விளையாட்டு (video game ) மின்கலம் (battery) தீர்ந்து விட தன் பாட்டியிடம் புதிய மின்கலம் (battery) வாங்கி தர வேண்டுகிறான், பாட்டியோ பணமில்லாத காரணத்தால் தன்னை மன்னிக்க வேண்டுகிறாள் . ஆத்திரம் அடையும் சங்க் வூ பாட்டியின் காலணிகளை எங்கோ எரிந்து விட்டு பாட்டி பயன்படுத்திய பீங்கான் சாடினயய் எத்தி உடைத்து விடுகிறான். விளையாட வழில்லாமல் , தன் பாட்டி தூங்கும் நேரம் பார்த்து அவள் வெள்ளி கொண்டை ஊசியை திருடி தனக்கு தெரிந்த பாதயில் மின்கலம் (battery) வாங்க செல்கிறான். பல கடைகளில் கேட்டு கிடைகாததால் ஊருக்கு வெளியே ஒரு கடையில் கிடைக்க, அதை வாங்க தன் பாட்டியின் ஆபரணத்தை விற்க முயல, கடைக்காரனோ பாட்டிக்கு தெரிந்தவன் போலும் அவனை தலையில் தட்டி பாட்டியிடம் கொடுக்க சொல்லுகிறான்.


இத்தனை சேட்டைகளையும் செய்யும் சங்க் வூ ,பாட்டி
அவனிடம் கேட்கும் ஒரே உதவி ஊசிக்கு நூல் கோர்த்துக்கொடுப்பது மட்டுமே அதையும் திட்டி
கொண்டே
கோர்த்துக்கொடுகிறான்.

ஒரு நாள் பாட்டியிடம் பொறித்த கோழியை தின்னக்கேட்க,சங்க் வூ காட்டிய இயே சைகையில் கோழி மட்டுமே அவளுக்கு புலப்படுகிறது.உடனே தான் வளர்த்த பூசணிகளை விற்று மழையில் நனைந்தவாறே கோழியை வாங்கி வந்து அவனுக்கு வேக வைத்த கோழி சமைத்து தருகிறாள்.தான் கேட்ட பொறித்த கோழியை சமைத்து கொடுக்காததால் ஆத்திரம் அடையும் சங்க் வூ உணவை எத்தி விட்டு அழுது கொண்டே உறங்கி விடுகிறான்.நடு இரவில் பசி எடுக்கவே அதே கோழியை உண்டு மறுபடியும் உறங்குகிறான்.முதல் நாள் மழையில் நனைந்த பாட்டி காய்ச்சலில் படுக்கவே அக்கறையுடன் தன் போர்வையை போர்த்தி விட்டு உணவை பரிமாறுகிறான்.




ஒரு நாள் சங்க் வூவும் பாட்டியுடன் சந்தைக்கு செல்கிறான்.அங்கு பேச முடியாத தன் ஊமை பாட்டி பூசணிகளை விற்க படும் அவஸ்தைகளை கண்டு மனம் நோகிறான்.விற்ற பணத்தில் சங்க் வூவுக்கு ஷூவும்,மிட்டாயும் வாங்கி கொடுகிறாள் .அந்த ஊரில் வசிக்கும் தன் சிநேகிதியிடம் சற்று நேரம் பேசி விட்டு கிளம்ப,அந்த சிநேகிதியோ நம் இருவரில் ஒருவர் உயிர் துறக்கும் முன்னர் இன்னொருமுறை வந்து தன்னை பார்க்க வருமாறு வேண்டுகிறாள்.

ஊருக்கு போக தன்னிடம் போதிய காசு இல்லாததால் சங்க் வூவை மட்டும் பேருந்தில் அனுப்பி வைக்கிறாள் . சங்க் வூ ஊருக்கு சென்றதும் தன் பாட்டியை அடுத்தடுத்து வந்த எல்லா பேருந்துகளிலும் தேடி,பின்னர் பாட்டி நடந்தே ஊருக்கு வந்தடைந்ததை கண்டு துடித்துப்போய் "எங்கே போனாய்" என்று உரிமையோடு கேட்டு வேதனைப்படுகிறான் .


எப்போதும் தன் பாட்டியுடன் கோபமாகவும்,பாட்டியின் அன்பை உதாசீனப்படுத்தும் சங்க் வூ,காலப்போக்கில் தன் பாட்டி காட்டும் கட்டுக்கடங்காப்பாசத்தை கண்டு தன் பாட்டியின் மேல் உயிரானான்.

சங்க் வூ பாட்டியை விட்டு கிளம்பி தன் தாயிடம் செல்லும் தருணம் வருகிறது .ஆனால் சங்க் வூக்கு பாட்டியை விட்டு பிரிய மனமில்லாதிருந்தாலும் செய்வதறியாது புழுங்குகிறான் ,பாட்டிக்கு எழுதப்படிக்க தெரியாத காரணத்தால் "எனக்கு உடம்பு சரியில்லை" என்றும் " தங்கள் பிரிவினால் நான் மிகவும் வருந்துகிறேன்" என்றும் தபால் அட்டையில் வரைந்து , இவை இரண்டில் அந்த அந்த சுழ்நிலைக்கு யட்ப அனுப்புமாறு வேண்டுகிறான் . மேலும் தன் பாட்டிக்கு எல்லா ஊசிக்கு நூல் கோர்த்துக்கொடுத்துவிட்டு மிகுந்த வேதனையுடம் அழுது கொண்டே உறங்கச்செல்றான்.

மறு நாள் தன்னை கூடிச்செல்ல வந்த தன் தாயுடன் கிளம்பிய சங்க் வூவை பிரிய மனமில்லாமல் வழியனுப்பிவிட்டு, ஆதரவாக யாருமே இல்லாத தன்னுடைய பழைய வாழ்கையை தொடர தளர்வடைந்து தன் குடிசையை நோக்கி நடந்து செல்கிறாள் பாட்டி. படமும் நெரிவு பெறுகிறது .

அன்பு என்ற மொழியால் பேசிய ஊமை பாட்டி நாம் மனதில் நீங்கா இடம் பிடிகிறாள் .