அமரர் சி.சு.செல்லப்பாவின் அறிமுகத்தை எஸ். ரா வின் வாசக பர்வம் கட்டுரையில் அறிந்தேன். தமிழ் இலக்கியத்தைச் சமகால உலக இலக்கியத்திற்குச் சமமானதாக உருமாற்ற வேண்டும் என்ற வேட்கை அவருக்குள் தீவிரமாக இருந்ததாகவும், எழுத்து மற்றும் மணிக்கொடி இதழ்களை நடத்த செல்லப்பா பட்ட இன்னல்களையும் பதிவு செய்திருந்தார்.அவர் படைப்பில் ஒன்றான வாடிவாசல் தமிழ் இலக்கியத்தில் மகுடம் சூட்டப்பட்ட குறு நாவல்களில் ஒன்று.ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல்.
ஜல்லிகட்டை விருமாண்டி, வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் பார்த்த எனக்கு வாடிவாசல் வாசிப்பின் முடிவில் நேரில் கலந்து கொண்ட அனுபவத்தை ஏற்படுத்தியது.ஏறுத்தழுவல் நாளன்று அருகாமையில் உள்ள ஊர்களில் இருந்து வரும் பார்வையாளர்கள் முதல், ஜமீன்தாரின் காரிக் காளையை அடக்கப்பட்டது வரை நடக்கும் நொடிப்பொழுது சம்பவங்களை கதையாக்கப்பட்டுள்ளது.
பிச்சியும்,மருதனும் மாபிள்ளை மச்சினன்.பிச்சியின் தந்தையை முந்தைய ஜல்லிக்கட்டில் கொன்ற ஜமீன்தாரின் காரிக்காளையை அடக்க வாடிவாசலை களமாக தேர்ந்து எடுக்கிறான் .வாடிவாசல் கூட்டத்தில் கிழவன் கொடுக்கும் நுட்பமான தகவல்களை கொண்டு பிறர் அடக்க அச்சப்படும் பிள்ளைக்,கொராலு காளைகளை அடக்கி கூட்டத்தின் மரியாதையைகளையும்,மதிப்புகளையு
எந்த விதத்திலும் யாரையும் புண்படுத்தாமல் மிகுந்த கவனத்துடனும் ,அதே போல தன் பழிவாங்கும் செயலில் வீரத்துடனும்,விவேகத்துடனும் பிச்சியின் கதாபாத்திரத்தை மனதில் பதியுமாறு கதயமைத்துள்ளார்.மேலும் வாடிவாசல் ஒரு நாவலாக மட்டுமில்லாமல் ஜல்லிக்கட்டை பற்றிய நுட்பமான தகவல் கொண்ட களஞ்சியமாக படைத்துள்ளார் சி.சு.செல்லப்பா.
இக்குறுநாவலை எழுத்து பத்திரிக்கையின் சந்தாதாரர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பினார் என்ற செய்தியும் உண்டு.
வாடிவாசல் - சி.சு.செல்லப்பா, காலச்சுவடு பதிப்பகம், ரூ 40