இறக்கை முளைத்த விதி - உலக சிறுகதை தொகுப்பு


உலகின் சிறந்த எழுத்தாளர்களின் தனித்துவமான சிறுகதைகளை , தமிழாக்கம்செய்து , அதன் தேர்ந்த தொகுப்பு தான் இந்த ' இறக்கை முளைத்த விதி' .

தமிழாக்கம் என்பது பிறமொழி சொற்களுக்கு ஏற்ற தமிழ்மொழி சொற்களைநிரப்புவதல்ல, மாறாக அது ஒரு கலை. “ மூலமொழியின் தன்மை,அதற்கேஉரிய தனிச்சிறப்பான பண்புகள், கதை உருவான சமூக பண்பாடுச்சூழல்,வரலாறு, ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அதே வேளை தமிழ்மொழிக்கு உரிய ஒலிப் பண்புகள், சொற்களஞ்சியம், பேச்சு வழக்கு எனப்பலவற்றை மனதில் கொண்டு மூலமொழிக்குரிய தமிழ்ச் சொல்லைத்தேர்ந்தெடுக்கிறோம்” என்று வாசகர்களுக்கு “
மொழிப்பெயர்ப்பு எதன் பொருட்டு“ என்ற முன்னுரையில் விளக்குகிறார்.

எட்டு உலக சிறுகதைகள், அச்சிறுகதையாசிரியர்களின் சிறிய வாழ்கைவரலாறு , உலக இலக்கியத்தில் இச்சிறுகதைகளின் பங்கு , எந்த தொகுப்பில்இடம் பெற்றன என்ற ஒருபக்க தகவலுடன் சிறுகதைகள் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.


வென் யுஹோங்யின் (wen yuhong ) - வெறி நகரம்

ஒரு தாய் வழிப் பிறந்த இரு சகோதர்கள், அவ்வூரில் உள்ள நாய்களைசித்ரவதை செய்து கொன்று குவிக்கின்றனர். நாளடைவில் நாய்களைகொல்வதற்கான, அரசாங்க உரிமம் கிடைக்க,அதையே தொழிலாகசெய்கின்றனர். நாய்களோடு நில்லாமல் தாங்களை மதிக்க மறுக்கும்மனிதர்களையும் கொன்று குவிக்கின்றனர். அவர்கள் வன்முறையின்உச்சத்தின் போதே மாயமென மறைந்து விடுகின்றனர். பின் போலீசாரிடம்விசாரிக்கையில், அவர்கள் காவல்துறையில் சேர்ந்துவிட்டதாகவும், திரும்பவும் நாய் வேட்டைக்கு வருவார்கள் எனவும் கூறுவது போலவும் கதைநிறைவு பெருகிறது. சீனாவின் “பண்பாட்டு புரட்சியின்“ பின்னணியில்எழுதப்பட்ட மற்றும் சர்ச்சைக்குள்ளான கதையிது .


அண்ணா பாவ் சாத்தேயின்(Anna Bau Sathe) - மயானத் தங்கம்

கல்லுடைக்கும் இடத்தை மூடிவிட்டதால் தன் வேலையை இழக்கும் பீமா தன்குடும்பத்தை காப்பாற்ற மயானத்தில் உள்ள பிணங்களின் தங்கத்தைத் திருடிவாழ்க்கையை நடத்துகிறான். எப்போதும்போல ஒரு இரவு மயானத்துக்குச்செல்ல அன்று நடக்கும் விபரீதத்தால் தன் விரல்களை இழக்கிறான். அந்நேரம்பார்த்து அவனுக்கு கல்குவாரியில் வேலைக்கு வருமாறு அழைப்பும்கிடைக்கிறது. எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் பீமா தவிப்பது போலகதை நிறைவு பெறுகிறது.


பிரா சுதம்யின்(Pira Sudham) - ஜெர்மனியில் ஒரு தாய்லாந்துப் பெண்

தாய்லாந்தில் வேசியாக இருந்த பெண் ஜெர்மானியரை மனந்து நல்ல குடும்பவாழ்க்கையை வாழ்ந்து வருகிறாள். அப்பெண்மணி தன் சக நாட்டவருக்கு தன்திருமண வாழ்வில் கிடைக்கும் சந்தோஷங்களையும், தன் தாய் நாட்டைவிட்டுப் பிரிந்த சோகத்தையும் பதிவு செய்கிறாள். கதை ஒரு வேசியின்வாழ்வில் நடந்த அவலங்களையும், ஜெர்மானியில் குடும்ப வாழ்க்கையின்நிறைவையும், சந்தோஷங்களையும் பகிர்வது போல அமைந்துள்ளன.


மாக்சிம் கார்க்கியின்(Maxim Karki) – புயற் பறவையின் கீதம்

பெரிய கடல் பறவைகள், பென்குயின்கள் யாவும் கடலையும், காற்றையும்அஞ்சிப் பகுந்திட, புயற் பறவை மட்டும், கடலில் உள்ள வெள்ளி நுரைததும்பும் நீர்ப்பரப்புக்கு மேல், அம்பு போல மேகங்களைப் பிளந்து ஒலிஎழுப்பியவாறு, புயலுக்கு அஞ்சாமல் பறக்கிறது. இளம் சோஷலிசசக்திகளுக்கு ஜார் அரசை எதிர்த்து புரட்சியில் இடுபட புயற் பறவைஉவமையாக பொருட்படுத்தி எழுதிய சிறுகதை.


உலக சிறுகதைகளை தமிழ் இலக்கியத்துக்கு எடுத்து காட்டியதற்காகவும், அழகாகவும், புரியும்படி சொல்லமைத்து தமிழாக்கம்
செய்தமைக்கு ஆசிரியர்கள் வ.கீதவுக்கும் , எஸ்.வி. ராஜதுரைக்கும் வணங்குதல் மேன்மையே.

இறக்கை முளைத்த விதி - .கீதா & எஸ்.வி.ராஜதுரை , அடையாளம் பதிப்பகம் , ரூ.70.00